சனி, 15 ஆகஸ்ட், 2020

பொறாமை கொண்ட நண்பனுக்கு நேர்ந்த கதி.

 


ஒரு நாள் மூன்று நண்பர்கள் ஒரு படகில் கடலில் சவாரி செய்துக்கொண்டு இருக்கும்போது திடீர் என பெரிய அலை வந்து படகை புரட்டிப்போட்டது. மூவரும் தத்தளித்து தடுமாறி நீந்தி ஓர் ஆள் நடமாற்றம் இல்லாத குட்டித்தீவில் கரைசேர்ந்தனர். 

   இப்போது எப்படி நமது சொந்த நாட்டுக்கு செல்வது என யோசித்தனர். கப்பல் எதுவும் அவ்வழியாக வரவில்லை. மூவரும் பயந்துபோய் கடவுளை நோக்கி எங்களை காப்பாற்றும் கடவுளே என மன்றாடினார்.

    அப்போது கடவுள் அவர்கள் முன் தோன்றி உங்களுக்கு என்ன வேண்டும் என கேளுங்கள். ஒருவருக்கு ஒரு வரம் மட்டுமே தருவேன் என கூறினார். அதற்கு முதலாவது நண்பன்  கடவுளே எனக்கு அமெரிக்க நாட்டில் பெரிய பணக்காரனாக வாழ வேண்டும் என்னை அப்படி மாற்றும் என கேட்டான். கடவுளும் அவன் கேட்டதையே செய்து அவனை பெரிய பணக்காரனாக மாற்றி அமெரிக்காவில் கொண்டு போய் விட்டார்.

   இரண்டாவது நண்பனும் வந்து கடவுளே என்னையும் அவனை போல் பெரிய பணக்காரனாக மாற்றி இங்கிலாந்தில் கொண்டு போய் விடும் என கூறினான். கடவுளும் அவன் கேட்டதை போலவே பெரிய பணக்காரனாக மாற்றி இங்கிலாந்தில் குடியேற்றினார். 

   இப்போது மூன்றாவது நண்பன் வந்ததும் கடவுள் அவனிடம் உனக்கு என்ன வேண்டும் என கேட்டார். அவனோ இப்போது என்னிடம் இருந்த இருவரையும் அவர்கள் முன்பு எப்படி இருந்தார்களே அதே போல கொடுத்த எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு திரும்ப இங்கேயே கொண்டு வந்து விட்டுவிடுங்கள் என கேட்டான். கடவுள் கொடுத்த வாக்கை காப்பாற்ற அவன் கேட்டதை போலவே அவர்கள் இருவரையும் திரும்பவும் அதே ஆள் நடமாற்றம் இல்லாத அத்தீவுக்கு கொண்டு வந்து விட்டுவிட்டு மறைந்துவிட்டார். 


நமக்கு கிடைக்கும் வாய்ப்புக்களை நாம் இன்னொருவரை வீழ்த்துவதற்கு பயன்படுத்தகூடாது. நாம் முயற்சி செய்து முன்னேறனுமே ஒழிய இன்னொருவரை வீழ்த்தி முன்னேற நினைக்கக்கூடாது. அப்படி செய்தால் நாம் அதே இடத்தில்தான் இருப்போம் ஒழிய முன்னேற மாட்டோம்.



வியாழன், 13 ஆகஸ்ட், 2020

விறகு வெட்டியும் தேவதையும்

   

   ஒரு ஊரில் ஒருவன் காட்டிற்கு சென்று விறகு வெட்டி விற்று தன் மனைவியோடு வாழ்ந்து வந்தான். ஏழ்மையான வாழ்க்கையே அவனால் வாழ முடிந்தது. ஒரு நாள் காட்டிற்கு விறகு வெட்ட சென்று மரத்தின் மீது ஏறி விறகு வெட்டிக்கொண்டு இருக்கும்போது அவனிடம் இருந்த ஒரு கோடரியும் தவறி அங்கிருந்த பெரிய ஆற்றில் விழுந்து விட்டது. இதை கண்ட அவன் கதறி அழ தொடங்கினான். என்னிடம் இருந்த ஒரு கோடரியும் போய் விட்டதே இனி எப்படி என் குடும்பத்தை கவனித்து கொள்வேன்  என்று  கடவுளை நோக்கி வேண்டினான். 

      அவ்வேளை ஒரு தேவதை அவன் முன் தோன்றி உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் நான் தருகிறேன் என கூறியது. அதற்கு அவன் கேட்டதெல்லாம் கிடைக்கும் ஒரு வரம் வேண்டும் என கூறினான். அதற்கு அந்த தேவதை ஒரு வரம் என்ன மூன்று வரம் உனக்கு தருகிறேன் உனக்கு வேண்டியதை சொல்லிக்கொண்டு இதில் இருக்கும் மூன்று விதைகளில் ஒன்றை கீழே போட்டால் நீ கேட்ட வரம் உனக்கு கிடைக்கும் என்றது. 

     அவனும் மிக்க மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு போய் மனைவியிடம்  நடந்தவற்றை கூறினான். அதற்கு மனைவி  நிறைய பணம் கேளுங்கள் என்று கூறினாள். கணவனோ இல்லை நிறைய பொருள் கேட்போம் என கூறினான். இருவரும் திரும்ப திரும்ப அவர்கள் கூறியதை கேட்டு வாதித்துக்கொண்டனர். அப்போது கணவன் சரி கதையை முடி முடி என்று சொல்லும்போதே கையில் இருந்த ஒரு விதை தவறி கீழே விழுந்துவிட்டது. இதனால் இருவர் உடம்பு முழுவதும் முடி வந்து மிருகம் போல் ஆகி விட்டனர். 

      இப்போது கணவன் மனைவியை உன்னால்தான் இப்படி ஆகிவிட்டது என்று  திட்டிக்கொண்டே உடம்பில் உள்ள எல்லா முடிகளும்  இல்லாமல் போகட்டும் என்று கூறி அடுத்த விதையை போட்டான். இப்போது அவர்கள் உடம்பில் இருந்த எல்லா முடிகளும்  போய்விட்டது. தலைமுடிகூட போய் மொட்டைத்தலையோடு இருந்தனர். 

       அதற்கு பிறகு இருவரும் கலந்தாலோசித்து இதற்கு என்ன செய்யலாம் என நன்றாக யோசித்து ஒரு மனிதனுக்கு எங்கு எங்கெல்லாம் முடி இருக்கனுமோ அங்கெல்லாம் பழைய மாதிரியே முடி வரட்டும் என கூறி இருந்த கடைசி விதையையும் கீழே போட்டனர். இப்போது அவர்கள் முன்பு இருந்த மாதிரியே அவர்கள் உடம்பில் எல்லா முடிகளும் வந்தது. 


இக்கதையில் இரண்டு கருத்து உள்ளது. முதலாவது நமக்கு கிடைக்கும் வாய்ப்புக்களை சரியாக பயன்படுத்த வேண்டும். இரண்டாவது மிக முக்கியமான தீர்மானங்களை நாம் மேற்கொள்ளும்போது எல்லோரிடமும் நன்றாக கலந்தாலோசித்து சரியாக செய்ய வேண்டும். சண்டையிட்டுக்கொள்வதால் இங்கு எதுவும் நடக்கபோவதில்லை. மாறாக இன்னும் அதிகமாக பிரச்சினைகளே உருவாகும்.



 

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2020

பேரனும் முதியோர் இல்லமும்.

   

    ஒரு ஊரில் குமார் தன் வயதான தந்தையை வீட்டில் வைத்து தன் குடும்பத்தோடு கவனித்து வந்தான். இதனால் அவனுக்கும் அவன் மனைவிக்கும் அடிக்கடி சண்டை வந்துக்கொண்டு இருந்தது.
    
      ஒரு நாள் தன் அவன் தன் தந்தையை ஒரு முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட எண்ணி மகனையும் அழைத்துக்கொண்டு முதியோர் இல்லத்திற்க்கு சென்றான்.

      தன் தந்தையை அங்கே சேர்த்துவிட்டு வீடு திரும்ப வெளியே வந்ததும் மகன் சிறிது நேரம் அந்த முதியோர் இல்லத்தையே பார்த்துக்கொண்டு நின்றான். குமார் அவனிடம் போய் இங்கே என்ன செய்கிறாய் என வினவினான். அதற்கு அவன் இல்லை அப்பா நான் உங்களை போல் பெரியவன் ஆனதும் நீங்கள் தாத்தாவை போல் ஆகிவிடுவீர்கள் அப்போது நான் உங்களை இங்கேதானே கொண்டு வந்துதானே விடனும் அதனால்தான் பார்த்துக்கொண்டு இருக்கேன் என் கூறினான். அப்பொதுதான் குமார் தன் தவறை உணர்ந்து தன் தந்தையை திரும்பவும் வீட்டுக்கே அழைத்து சென்றுவிட்டான்.


பிள்ளைக்களுக்கு தன் பெற்றோரே முதல் ஹீரோ அவர்களை பார்த்துதான் எல்லாவற்றையும் கற்றுக்கொள்கிறார்கள். நாம் அவர்களுக்கு நல்லதையே விதைப்போம். மற்ற பிள்ளைகளிடம் ஒப்பிட்டு பேசாமல் அவர்கள் கணவன் மனைவி சண்டை போடாமல் மதிப்புள்ள பெற்றோராக இருப்போம்.



வெள்ளி, 31 ஜூலை, 2020

சமயோகித புத்தியினால் பிழைத்த நாய்.

  
 

   ஒரு காட்டில் ஒரு வளர்ப்பு நாய் ஒன்று வழி தவறி சென்று மாட்டிக்கொண்டது. செய்வதறியாது காட்டிலே அங்கும் இங்கும் ஓடிக்கொண்டு திரிந்தது. 
    
    அந்த நேரம் அவ்வழியே ஒரு சிங்கம் வந்தது. சிங்கத்தை கண்ட நாய்க்கு நடுங்கிப்போய் திகைத்தது. பிறகு சிங்கம் வரும் எதிர்ப்பக்கமாக முதுகை மட்டும் காட்டிக்கொண்டு அமர்ந்தவாறு  அங்கு கிடந்த இறைச்சி துண்டை சாப்பிடுவது போல பாசாங்கு செய்தவாறு  இந்த இறைச்சி என் பசிக்கு போதவில்லையே இந்த நேரம் சிங்கம் ஒன்று இருந்தால் அதை பிடித்து பசியை போக்கிக்கொள்ளலாம் என்று தனக்குத்தானே சத்தமாக பேசிக்கொண்டு இருந்தது. 

   இதை கண்ட அச்சிங்கமோ ஏற்கனவே களைப்புற்று வருகிறேன் இந்நேரம் இந்த மிருகத்தை சமாளிக்க முடியாது என்று வந்த வழியே ஓடிப்போனது. நாயின் பின்புறம் பார்த்ததால் சிங்கம் இது ஒரு அபூர்வ மிருகம் என எண்ணி ஓட்டம்பிடித்தது. 
 
    இதையெல்லாம் மரத்தில் இருந்து கவனித்த ஒரு குரங்கு விரைவாக சென்று சிங்கத்திடம் நடந்த உண்மையை கூறியது. சிங்கம் கோவமாக திரும்ப வந்தது.

  இந்நேரம் நாயோ மறுபடியும் முதுகை காட்டிக்கொண்டு அமர்ந்தவாறு . காட்டிற்கு போய் ஏதாவது சிங்கம் ஒன்றை ஏமாற்றி கூட்டி வருமாறு குரங்கை அனுப்பினோம். இன்னும் காணவில்லையே என்னால் பசியை அடக்க முடியவில்லையே என மீண்டும் சத்தமாக பேசிக்கொண்டு இருந்தது.

   சிங்கம் மருபடியும் பயந்து ஓடியே போய்விட்டது.


நமக்கு வரும் பிரச்சினைகளை நாமே சமாளிக்க கூடிய வல்லமையை கடவுள் நமக்கு கொடுத்துள்ளார். நாம் நமது மூளையை பயன்படுத்தி நன்றாக யோசித்து சரியான முடிவெடுத்தால் எல்லா பிரச்சினைகளையும் முகங்கொடுக்கக்கூடிய திறமை வந்துவிடும்.
வீட்டிலே ரோஜா பூ இலை செய்வது மிகவும் இலகுவானது.

வீட்டிலே ரோஜா பூ செய்வது எப்படி 
 

வியாழன், 30 ஜூலை, 2020

நல்ல நண்பனை ஆபத்தில் தெரிந்துக்கொள்ளலாம்.



   ஒரு நாள் இரு நண்பர்கள் பாதையில் நடந்து செல்லும்போது ஒரு கரடி  வருவதை கவனித்தனர். இருவரும் செய்வதறியாது சிறிதுநேரம் திகைத்தனர். 

 கரடி  அருகில் வந்ததும் ஒரு நண்பன் மரத்தின்மீது ஏறி ஒளிந்துக்கொண்டான். மற்ற நண்பனுக்கு மரம் ஏற தெரியாமல் திகைத்து திடீர் என்று கீழே படுத்து இறந்தவன் போல மூச்சு விடாமல் அப்படியே கிடந்தான்.

      கரடி அவனருகில் வந்து  காதோரம்  நன்றாக முகர்ந்து பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு திரும்பவும் வந்த வழியே போய்விட்டது.

    கரடி போனதும் மரத்தில் இருந்து மற்ற நண்பன் இறங்கி வந்து  கரடி
உன் காதில் வந்து என்ன சொன்னது என்று கேட்டான். அதற்கு அந்த நண்பன் சொன்னான் உற்ற நண்பனை ஆபத்தில் தெரிந்துக்கொள்ளலாம் உன் நண்பனை நம்பாதே உனக்கு ஒரு ஆபத்து என்று தெரிந்ததும் தன் உயிர் முக்கியம் என்று உன்னை காப்பாற்றாமல் அவனை மட்டும் காப்பாற்றிக்கொண்டான் அவனை நம்ப வேண்டாம் என்று சொல்லிவிட்டு சென்றது என்று கூறிவிட்டு போய்விட்டான்.


நல்ல நண்பன் எப்போதும் தன் நண்பனுக்காக எதையும் எதிர்பார்க்காமல் செய்வான் அவனே உயிர் நண்பன்.

பொறாமை கொண்ட நண்பனுக்கு நேர்ந்த கதி.

  ஒரு நாள் மூன்று நண்பர்கள் ஒரு படகில் கடலில் சவாரி செய்துக்கொண்டு இருக்கும்போது திடீர் என பெரிய அலை வந்து படகை புரட்டிப்போட்டது. மூவரும் தத...