வெள்ளி, 31 ஜூலை, 2020

சமயோகித புத்தியினால் பிழைத்த நாய்.

  
 

   ஒரு காட்டில் ஒரு வளர்ப்பு நாய் ஒன்று வழி தவறி சென்று மாட்டிக்கொண்டது. செய்வதறியாது காட்டிலே அங்கும் இங்கும் ஓடிக்கொண்டு திரிந்தது. 
    
    அந்த நேரம் அவ்வழியே ஒரு சிங்கம் வந்தது. சிங்கத்தை கண்ட நாய்க்கு நடுங்கிப்போய் திகைத்தது. பிறகு சிங்கம் வரும் எதிர்ப்பக்கமாக முதுகை மட்டும் காட்டிக்கொண்டு அமர்ந்தவாறு  அங்கு கிடந்த இறைச்சி துண்டை சாப்பிடுவது போல பாசாங்கு செய்தவாறு  இந்த இறைச்சி என் பசிக்கு போதவில்லையே இந்த நேரம் சிங்கம் ஒன்று இருந்தால் அதை பிடித்து பசியை போக்கிக்கொள்ளலாம் என்று தனக்குத்தானே சத்தமாக பேசிக்கொண்டு இருந்தது. 

   இதை கண்ட அச்சிங்கமோ ஏற்கனவே களைப்புற்று வருகிறேன் இந்நேரம் இந்த மிருகத்தை சமாளிக்க முடியாது என்று வந்த வழியே ஓடிப்போனது. நாயின் பின்புறம் பார்த்ததால் சிங்கம் இது ஒரு அபூர்வ மிருகம் என எண்ணி ஓட்டம்பிடித்தது. 
 
    இதையெல்லாம் மரத்தில் இருந்து கவனித்த ஒரு குரங்கு விரைவாக சென்று சிங்கத்திடம் நடந்த உண்மையை கூறியது. சிங்கம் கோவமாக திரும்ப வந்தது.

  இந்நேரம் நாயோ மறுபடியும் முதுகை காட்டிக்கொண்டு அமர்ந்தவாறு . காட்டிற்கு போய் ஏதாவது சிங்கம் ஒன்றை ஏமாற்றி கூட்டி வருமாறு குரங்கை அனுப்பினோம். இன்னும் காணவில்லையே என்னால் பசியை அடக்க முடியவில்லையே என மீண்டும் சத்தமாக பேசிக்கொண்டு இருந்தது.

   சிங்கம் மருபடியும் பயந்து ஓடியே போய்விட்டது.


நமக்கு வரும் பிரச்சினைகளை நாமே சமாளிக்க கூடிய வல்லமையை கடவுள் நமக்கு கொடுத்துள்ளார். நாம் நமது மூளையை பயன்படுத்தி நன்றாக யோசித்து சரியான முடிவெடுத்தால் எல்லா பிரச்சினைகளையும் முகங்கொடுக்கக்கூடிய திறமை வந்துவிடும்.
வீட்டிலே ரோஜா பூ இலை செய்வது மிகவும் இலகுவானது.

வீட்டிலே ரோஜா பூ செய்வது எப்படி 
 

வியாழன், 30 ஜூலை, 2020

நல்ல நண்பனை ஆபத்தில் தெரிந்துக்கொள்ளலாம்.



   ஒரு நாள் இரு நண்பர்கள் பாதையில் நடந்து செல்லும்போது ஒரு கரடி  வருவதை கவனித்தனர். இருவரும் செய்வதறியாது சிறிதுநேரம் திகைத்தனர். 

 கரடி  அருகில் வந்ததும் ஒரு நண்பன் மரத்தின்மீது ஏறி ஒளிந்துக்கொண்டான். மற்ற நண்பனுக்கு மரம் ஏற தெரியாமல் திகைத்து திடீர் என்று கீழே படுத்து இறந்தவன் போல மூச்சு விடாமல் அப்படியே கிடந்தான்.

      கரடி அவனருகில் வந்து  காதோரம்  நன்றாக முகர்ந்து பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு திரும்பவும் வந்த வழியே போய்விட்டது.

    கரடி போனதும் மரத்தில் இருந்து மற்ற நண்பன் இறங்கி வந்து  கரடி
உன் காதில் வந்து என்ன சொன்னது என்று கேட்டான். அதற்கு அந்த நண்பன் சொன்னான் உற்ற நண்பனை ஆபத்தில் தெரிந்துக்கொள்ளலாம் உன் நண்பனை நம்பாதே உனக்கு ஒரு ஆபத்து என்று தெரிந்ததும் தன் உயிர் முக்கியம் என்று உன்னை காப்பாற்றாமல் அவனை மட்டும் காப்பாற்றிக்கொண்டான் அவனை நம்ப வேண்டாம் என்று சொல்லிவிட்டு சென்றது என்று கூறிவிட்டு போய்விட்டான்.


நல்ல நண்பன் எப்போதும் தன் நண்பனுக்காக எதையும் எதிர்பார்க்காமல் செய்வான் அவனே உயிர் நண்பன்.

சனி, 25 ஜூலை, 2020

இக்கரைக்கு அக்கறை பச்சை

    
   




முன்னொரு காலத்தில் ஊரில் இளம்பெண் ஒருத்தி இருந்தாள். அவள் சிறு வயதிலே செல்வந்தர் ஒருவரை பணத்திற்கு ஆசைப்பட்டு மணந்துகொண்டாள்.

   சிறிது காலத்திற்கு பிறகு அந்த செல்வந்தர் நோய்வாய்ப்பட்டு  சொத்தெல்லாம் விற்று நோயை சுகமாக்க முயற்சி செய்தும் பலனளிக்கவில்லை. இறுதியில் அவரிடம் பல விலைமதிப்புள்ள வைரக்கற்களும் தங்க நாணயமும் இருந்தது. அதை ஒரு பணப்பையில் முடிந்து இடுப்பில் சொருகிக்கொண்டே காலத்தை தள்ளினார். 

  கணவனின் நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அந்தப்பெண் ஊர்ச்சுற்றிக்கொண்டு இருந்தாள்.

      இதேவேளை அவ்வூரிலே சிறு சிறு திருட்டு வேலைகளை செய்துக்கொண்டு ஒருவன் வாழ்ந்து வந்தான். அத்திருடனுக்கும் இந்தப்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் தங்களிடம் உள்ள எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு ஊரை விட்டு ஓடிவிட  திட்டம் தீட்டினர். அப்பெண்ணும் எனது கணவனிடம் பல விலைமதிப்புள்ள வைரக்கற்களும் தங்க நாணயமும் உள்ள பணப்பை இருக்கிறது. அதை அவர் உறங்கிய பின்னர் எப்படியாவது எடுத்து வந்துவிடுகிறேன் எண்டு கூறினாள். திருடனும் மகிழ்ச்சியோடு சரியென்று தலையசைத்தான்.

      திட்டம் தீட்டியதுபோல ஊர் உறங்கிய பின்னர் நள்ளிரவு இருவரும் எல்லாவற்றையும் தூக்கிக்கொண்டு திருடன் காட்டு வழியாக  தந்திரமாக அழைத்து சென்றான். 

     சிறிது தூர பயணத்திற்கு பிறகு எதிரே பெரிய ஆறு ஒன்று குறுக்கிட்டது. ஆற்றை எப்படி நீந்தி கடந்து செல்வது என்று வினவினான். பிறகு அவனாகவே முதலில் நம்மிடம் உள்ள எல்லா பொருட்களையும் அக்கரைக்கு கொண்டு போய் வைத்துவிட்டு வந்து உன்னை அழைத்து செல்கிறேன் என கூறினான்.  சொல்லிவிட்டு சிறிது தூரம் சென்றவன் திரும்பி வந்து உனது ஆடைகள் அனைத்தையும் களைந்து தந்துவிடு பிறகு உன்னை அழைத்து செல்லும்போது உன்னை தூக்கிக்கொண்டு செல்ல இலகுவாக இருக்கும். இல்லையென்றால் உன்னை தூக்கிக்கொண்டு ஆற்றில் நீந்தும்போது உனது ஆடைகள் நனைந்து பாரம் கூடி என்னால் கரையை கடக்க முடியாமல் போய்விடும் என கூறினான். அவன்  கூறியதை நம்பி அப்பெண்ணும் எல்லா உடைகளையும் களைந்து கொடுத்தாள். 

     அத்திருடனோ எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு அக்கரைக்கு சென்றவன் அப்படியே ஓடிவிட்டான். தன ஏமாந்துபோனதை எண்ணி வருந்திய அப்பெண் திரும்ப ஊருக்கும் செல்லமுடியாமல் தனது நிர்வாணத்தை மறைக்க ஆற்றில் இறங்கி அமர்ந்துக்கொண்டாள்.

     இதேநேரம் ஒரு நரஇறைச்சி துண்டொன்றை கவ்விக்கொண்டு அவ்வழியாக வந்தது. அவ்வேளை ஆற்றிலிருந்து மீனொன்று குதித்து வெளியே வந்து விழுந்தது. மீனை கவனித்த நரி இறைச்சியை கீழே போட்டுவிட்டு மீனை எடுக்க சென்றது. நரி வருவதை கவனித்த மீனோ திரும்பவும் ஆற்றுக்குள் பயந்து சென்றுவிட்டது. மீனை பிடிக்க முடியாத கவலையில் நரி  இறைச்சியை எடுக்க திரும்ப வந்தது. அவ்வேளை வேகமாக பறந்து வந்த பருந்தொன்று அந்த இறைச்சியை கவ்விக்கொண்டு பறந்து சென்று விட்டது.  

    இதையெல்லாம் ஆற்றில் அமர்ந்துக்கொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்த அப்பெண் ஏளனமாக சிரித்துக்கொண்டு ஏன் நரியே கிடைத்த இறைச்சியை கொண்டு இன்று பசியை ஆற்றிக்கொண்டு போயிருக்கலாம்தானே எதற்கு மீனுக்கு ஆசைப்பட்டாய் இப்போது உன்னிடம் மீனும் இல்லை இறைச்சியும் இல்லை என்று எள்ளி நகையாடினாள்.

      அதற்கு அந்த நரி நீர் மட்டும் என்ன உனது கணவனை கவனித்துக்கொண்டு இருந்திருக்கலாமே இப்போது பார் உனக்கு கட்டிய கணவனும் இல்லை. நம்பிய காதலனும் இல்லை இருந்த உன் கணவனின் சொத்தும் இல்லை. உனது மானத்தை காக்க உடையும் இல்லை. நான் கூட பரவாயில்லை. இப்பொழுது உணவு இல்லாவிட்டாலும் பிறகு தேடிக்கொள்வேன் அனால் உன்னிலையோ பரிதாபம் என்று சிரித்தவாறு சென்றது.


நம்மிடம் இருப்பதை கொண்டு திருப்தியாக வாழவேண்டும். வாழ்க்கை சொர்க்கமாகவும் இருக்கும் நிம்மதியாகவும் இருக்கும்.


  

     
    
    
     
    
     



பொறாமை கொண்ட நண்பனுக்கு நேர்ந்த கதி.

  ஒரு நாள் மூன்று நண்பர்கள் ஒரு படகில் கடலில் சவாரி செய்துக்கொண்டு இருக்கும்போது திடீர் என பெரிய அலை வந்து படகை புரட்டிப்போட்டது. மூவரும் தத...